உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்

Published On 2023-01-23 13:11 IST   |   Update On 2023-01-23 13:11:00 IST
  • ராஜபாளையத்தில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் சின்னத்தாய். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சின்னதாய் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சிவகாசி அருகே உள்ள வலையப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பத்மபிரியா (19). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் தென்காசி மாவட்டம் ஆவுடையாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் சென்றிருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல் குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக சாமி. இவரது மனைவி பத்மாவதி (32). இவர்களுக்கு 2 வயதில் கவியரசன் என்ற மகன் உள்ளான். சம்பவத்தன்று மனைவி-மகனை வெம்பக்கோட்டையில் உள்ள கோவிலுக்கு ஆறுமுகசாமி அழைத்து சென்றார். சாமி கும்பிட சென்ற பத்மாவதி மகனுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News