உள்ளூர் செய்திகள்

பெயிண்டர் கொலையில் 3 பேரை பிடித்து விசாரணை

Published On 2022-07-28 08:00 GMT   |   Update On 2022-07-28 08:00 GMT
  • பெயிண்டர் கொலையில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
  • உறவினர் பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் முத்தாள் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவர் மகன் மாரிச்செல்வம் (வயது 19), பெயிண்டர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரது உறவினர் பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதுெதாடர்பாக விஜய் மற்றும் அஜித்குமார், ராஜூ ஆகியோர் மாரிச்செல்வத்திடம் தட்டிக்கேட்டுள்ளனர். இருந்தபோதிலும் மாரிச்செல்வம் தொடர்ந்து அந்த பெண்ணை தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், அஜித்குமார், ராஜூ ஆகியோர் மாரிச்செல்வத்துக்கு மது வாங்கிக்கொடுத்துள்ளனர். அவர் போதையில் இருந்தபோது அவரை கொலை ெசய்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதுபற்றி மாரிச்செல்வ த்தின் தந்தை சங்கர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், அஜித்குமார், ராஜூ ஆகிய 3 பேரையும் பிடித்து மாரிச்செல்வம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News