உள்ளூர் செய்திகள்

2-வது திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2022-08-25 05:58 GMT   |   Update On 2022-08-25 05:58 GMT
  • 2-வது திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
  • ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு மலையடிப்பட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜானகி. இவரது மகள் காளீஸ்வரி (வயது 26). இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளீஸ்வரி அவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். 2020-ம் ஆண்டு வத்திராயிருப்பை சேர்ந்த ஆனந்த் என்பவரை காளீஸ்வரி 2-வதாக திருமணம் செய்துகொண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள ஜெகதாப்பட்டினத்தில் வசித்து வந்தனர். ஆனந்துக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் காளீஸ்வரியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை கவனித்துக்கொள்வதற்காக சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு வந்தார். நேற்று ஆஸ்பத்திரியில் இருந்த காளீஸ்வரி உணவு வாங்குவதற்காக கடை வீதிக்கு சென்றார். அப்போது அங்கு போதையில் வந்த ஆனந்த் நடு ரோட்டில் மனைவியிடம் தகராறு செய்தார். மேலும் அவர் வைத்திருந்த செல்போனை சேதப்படுத்தியதோடு, சரமாரியாக தாக்கினார். இதனால் அவமானம் அடைந்த காளீஸ்வரி தாயாரிடம் நடந்ததை கூறி வருத்தப்பட்டார். பின்னர் வீட்டுக்கு சென்ற அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துெகாண்டார்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News