உள்ளூர் செய்திகள்

பெண் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-05-01 13:34 IST   |   Update On 2023-05-01 13:34:00 IST
  • சிவகாசி அருகே பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
  • போலீஸ் நிலையத்தில் ராமராஜின் சகோதரர் முருகன் புகார் செய்தார்.

விருதுநகர்

சிவகாசி அம்மன் கோவில்பட்டி புது தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி(35). இவர் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான மோட்டார் அறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மல்லி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரியின் சகோதரி சுந்தரேசுவரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் பசும்பொன் காலனியை சேர்ந்தவர் ராமராஜ்(37), கட்டிட தொழிலாளி. மனைவியை பிரிந்து 2 வருடங்களாக தனியே வசித்து வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் விரக்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மல்லி போலீஸ் நிலையத்தில் ராமராஜின் சகோதரர் முருகன் கொடுத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News