உள்ளூர் செய்திகள்

ஓட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் மாயம்

Published On 2023-04-29 08:06 GMT   |   Update On 2023-04-29 08:06 GMT
  • ஓட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் மாயமானார்கள்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது44). ஓட்டல் வைத்துள்ளார். சம்பவத்தன்று கடைக்கு சாமான் வாங்குவதற்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இதைத்தொ டர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சுரேஷ்கு மாரின் மனைவி காளீஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் சந்திரகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராஜ். இவரது மகன் மாரீஸ்வரன் (24). இவர் ராமநாத புரத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஊருக்கு வந்து விட்டு கடந்த7-ந் தேதி மீண்டும் ராமநாதபுரம் சென்றார். ஆனால் ஜவுளி கடைக்கு செல்லவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டு ள்ளது. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொ டர்ந்து ஆம த்தூர் போலீஸ் நிலையத்தில் மகனை கண்டு பிடித்து தருமாறு சங்கர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா

ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News