உள்ளூர் செய்திகள்

பஸ் கண்டக்டர் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-06-06 08:48 GMT   |   Update On 2023-06-06 08:48 GMT
  • விருதுநகரில் பஸ் கண்டக்டர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்.
  • பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் சின்ன தாயம்மன் ரோடு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது52). அரசு பஸ் கண்டக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நல பாதிப்பு இருந்து வந்தது. இதனால் அவர் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் ரோசல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(55). இவர் தனது 2 மகள்களின் திருமணத்திற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை திரும்ப செலுத்தமுடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துப்பாண்டியின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News