உள்ளூர் செய்திகள்

முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-04-13 08:09 GMT   |   Update On 2023-04-13 08:09 GMT
  • விருதுநகரில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை திருவிருந்தாள்புரத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 53). இவர் உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் பாலமுருகன் அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வி.எம்.நகரை சேர்ந்தவர் பிரின்ஸ் குருநாத் (41), ஓவியர். இவரது மனைவி சங்கரேஸ்வரி. இந்த நிலையில் மதுரை சென்று வருவதாக கூறிச் சென்ற அவர் மாயமாகி விட்டார். இந்த நிலையில் அவர் தனது அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி அவரது மனைவி சங்கரேஸ்வரி ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News