உள்ளூர் செய்திகள்

ரூ.160 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி பூங்கா திறப்பு

Published On 2023-07-30 06:01 GMT   |   Update On 2023-07-30 06:01 GMT
  • ரூ.160 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி பூங்கா திறக்கப்பட்டது.
  • அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார் அமைச்சர் திறந்து வைத்தார்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் நூற்றாண்டு விழா 2020-21 திட்டத்தின் கீழ் ரூ.160 லட்சம் மதிப்பில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகர ணங்களுடன் கூடிய பூங்கா வினை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பி னர் அசோகன் மற்றும் சிவ காசி மாநகராட்சி மேயர் சங் கீதா இன்பம் ஆகியோர் முன்னிலையில், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பேசியதாவது:-

தமிழ்நாடு முதல் அமைச் சர் அவர்கள் தலைமையி லான தமிழக அரசு, மாநக ராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமபுறங்களின் உட் கட்டமைப்பை மேம்படுத்து வதற்காக பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வரு கிறது.

இந்த திட்டங்கள் மூலம் அடிப்படை தேவைகளான குடிநீர் இணைப்புகள், சுகா தாரம், உள்புறச் சாலைகள், தெருவிளக்குகள், பூங்காக் கள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்து வரு கிறது.

அதனடிப்படையில் சிவகாசி மாநகராட்சி ஜே. நகரில் ரூ.65 லட்சம் மதிப்பி லும், புதுக்காலனியில் ரூ.40 லட்சம் மதிப்பிலும், 66 காலனியில் ரூ.55 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.160 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட விளை யாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்காக்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநக ராட்சி ஆணையர் சங் கரன், மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் விவேகன் ராஜ், வட்டாட்சியர் லோகநாதன் உள்பட அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநிதி கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News