உள்ளூர் செய்திகள்

ராய்ப்பூர் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விஜய் வசந்த் எம் பி பங்கேற்பு

Published On 2023-02-25 23:09 GMT   |   Update On 2023-02-25 23:09 GMT
  • ராய்ப்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது.
  • இதில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார்.

கன்னியாகுமரி:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியாக தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் வழிகாட்டும் குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம், கட்சித்தலைவர் கார்கேவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ராய்ப்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் கன்னியாகுமர் தொகுதி எம்.பி விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News