உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை

Published On 2022-11-16 15:35 IST   |   Update On 2022-11-16 15:56:00 IST
  • அதிகாரிகள் கிருஷ்ணகிரி மகாராஜகடை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கடந்த 5 மாதத்தில் மட்டும் 200 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதிகாரிகள் கிருஷ்ணகிரி மகாராஜகடை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • கடந்த 5 மாதத்தில் மட்டும் 200 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணகிரி மகாராஜகடை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேல்பட்டி அருகே உள்ள தர்மராஜா நகர் பகுதியில் கேட்பாரற்று நின்றிருந்த காரை சோதனை செய்தனர். அதில் 2,250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. மேலும் காரின் உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது தாசில்தார் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் உணவுக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து பறக்கும்படை தாசில்தார் இளங்கோ நிறுவனம்:-

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 மாதத்தில் மட்டும் 200 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News