உள்ளூர் செய்திகள்

முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்

நெல்லையில் கால்நடை மருத்துவ முகாம்

Published On 2022-11-17 14:54 IST   |   Update On 2022-11-17 14:54:00 IST
  • மானூர் யூனியன் பேட்டை ரூரல் ஊராட்சி கொண்டாள வளவு சமுதாய நலக்கூடத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
  • முகாமில் ஆடு, மாடு ஆகிய கால்நடைகளுக்கு தடுப்பூசி , சத்து மாவு மற்றும் சினை ஊசி போடப்பட்டது.

நெல்லை:

மானூர் யூனியன் பேட்டை ரூரல் ஊராட்சி கொண்டாள வளவு சமுதாய நலக்கூடத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் வரவேற்று பேசினார். ஊராட்சி துணைத்தலைவர் சுப்புலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட கால்நடைத்துறை துணை இயக்குனர் தியோபிலஸ் ரோஜர், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கலையரசி, நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ஜான் சுபாஷ் தொழில்நுட்ப உரை ஆற்றினர். சிறப்பு விருந்தினராக சென்னை முதன்மை நோய் நிகழ்வியல் அலுவலர் சத்யநாராயணன் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.

முகாமில் பேட்டை ரூரல் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் மணிகண்டன், ஹரி நாராயணன்,அம்பை உதவி இயக்குனர் தங்கராஜ், ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கால்நடை உதவி மருத்துவர் ரேவதி நன்றி கூறினார்.இந்த முகாமில் ஆடு, மாடு ஆகிய கால்நடைகளுக்கு தடுப்பூசி , சத்து மாவு மற்றும் சினை ஊசி போடப்பட்டது.

Tags:    

Similar News