உள்ளூர் செய்திகள்

சேலையில் தீப்பிடித்து பெண் சாவு

Published On 2023-07-09 08:34 GMT   |   Update On 2023-07-09 08:34 GMT
  • தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர், கஸ்பா பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி லலிதா (வயது 58).

கடந்த மாதம் 16-ந் தேதி லலிதா வீட்டில் தீபம் ஏற்றுக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்து எரிந்தது.

தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. லலிதா வலியால் அலறி துடித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்ட வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்து லலிதா உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர் லலிதாவை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி லலிதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தெற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News