உள்ளூர் செய்திகள்

வள்ளி தேவசேனா பாலசுப்ரமணியர் திருக்கல்யாணம்

Published On 2023-11-20 15:05 IST   |   Update On 2023-11-20 15:05:00 IST
  • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது
  • அறுசுவை உணவு பரிமாறப்பட்டது

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், சாத்துமதுரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவிலில் முருகர் திருக்கல்யாணம் நடந்தது.

இதற்கு கிராம கனாச்சாரி சிவலிங்கம், கிராம நாட்டான்மைதாரர் துளசிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமிராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் முருகனடிமை ஜம்பு என்கிற சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இதில்முருகருக்கு பட்டு வேட்டி ஆடை, அம்பாளுக்கு பட்டுப்புடவை மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தேவசேனா, வள்ளி- முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மொய் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பணம் மற்றும் நகைகளை மொய் எழுதினர். இதைத் தொடர்ந்து அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

Tags:    

Similar News