உள்ளூர் செய்திகள்

கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை

Published On 2023-07-11 14:39 IST   |   Update On 2023-07-11 14:39:00 IST
  • 108 மூலிகைப் பொருட்கள் கொண்டு யாகம்
  • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

அணைக்கட்டு:

அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் கிராமத்தில் உள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. யாகசாலை பூஜையில் 108 மூலிகைப் பொருட்கள் மற்றும் திரவியங்கள் கொண்டு யாகம் நடத்தப்பட்டது.

மேலும் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதில் அணைக்கட்டு மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கடேசன், ஏரிபுதூர் ஊராட்சிமன்ற தலைவர் கீதாவெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News