பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் குட்கா பறிமுதல்
- 42 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு
- வேலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா, குட்கா கடத்து பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களை தடுக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு
வேலூர், காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய உட்கோட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் சட்டவி ரோதமாக கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொ ருட்கள் விற்கப்படு கின்றனவா என திடீர் சோதனை நடத்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
42 வழக்குகள் பதிவு
இதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.40,686 மதிப்புடைய சுமார் 7.056 கிலோ கிராம் குட்கா, ரூ.7,744 மதிப்புடைய 646 பீடிக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.வியாபாரிகள் மீது 42 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.