உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூரில் இன்று நடந்த ஆட்டு சந்தையில் ஆடுகள் வரத்து மந்தமாக காணப்பட்டது.

ஒடுக்கத்தூர் சந்தையில் மழையால் ஆடுகள் விற்பனை குறைந்தது

Published On 2022-11-04 09:46 GMT   |   Update On 2022-11-04 09:46 GMT
  • வியாபாரிகள் வேதனை
  • மொத்தம் ரூ.4.60 லட்சத்திற்கு மட்டுமே விற்பனை

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்தைக்கு தங்களின் ஆடுகளை விற்கவோ, வாங்கவோ இங்கு கூடுகின்றனர்.

அதுமட்டுமின்றி, வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும் வருவார்கள்.

இதனாலேயே ஒடுகத்தூர் ஆட்டு சந்தையில் விற்பனை களைகட்டும். இங்கு வாரம் தோறும் சுமார் ரூ.10 முதல் 15 லட்சம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில், வழக்கம்போல் இன்று ஆட்டு சந்தை கூடியது. ஆனால், காலை முதலே லேசான சாரல் மழை பெய்ததால் குறைவான ஆடுகளே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

இதனால், குறைந்த அளவிற்கே ஆடுகள் விற்பனையானது. இதனால், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஆடுகள் மொத்தமாக ரூ.4.60 லட்சத்திற்கு மட்டுமே விற்பனையானது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News