உள்ளூர் செய்திகள்

விபத்தில் சலவன்பேட்டை வாலிபர் பலி

Published On 2023-04-30 13:37 IST   |   Update On 2023-04-30 13:37:00 IST
  • பைக்கில் இருந்து விழுந்தவர் மீது கார் மோதியது
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வேலூர்:

வேலூர் சலவன்பே ட்டையை சேர்ந்தவர் பாலாஜி (வயது 34).

இவர் நேற்று பள்ளிகொண்டா நோக்கி பைக்கில் சென்றார். அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஏறிய போது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

அந்த நேரத்தில் அவரது பின்னால் வந்த கார் பாலாஜி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்தார் .

விரிஞ்சிபுரம் போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி இறந்தார்.

இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News