உள்ளூர் செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு

Published On 2023-02-08 10:06 GMT   |   Update On 2023-02-08 10:06 GMT
  • விண்ணப்பம் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்
  • கலெக்டர் தகவல்

வேலூர்:

வேலுார் மாவட்டத்தில் ஆதிதிராவி டர் நலத்துறை கீழ் செயல்படும் தொடக் கப்பள்ளிகளில் ஓராசியர் பள்ளிகளில் தற்காலிகமாக இடைநிலை ஆசிரியர்களை 7,500 ரூபாய் மாத தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப் பெற்றுள்ளது.

பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.

செட்டிக்குப்பம், கத்தாழம்பட்டு, சேக்கனூர், சத்துவாச்சாரி, பென்னாத்தூர் ஆர்.வெங்கடாபுரம், வெட்டுவாணம், கம்மசமுத்திரம், கீழுர், கவசம்பட்டு, கே.வி.குப்பம், காட்டுபுத்தூர், சோழவரம் ஆகிய தொடக்கப்பள்ளி களில் இடை நிலை ஆசிரியர் பணியிடம் தலா ஒன்று காலியாக உள்ளது.

வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அல்லது வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியா கவோ அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News