உள்ளூர் செய்திகள்

கன மழையால் நிலத்தில் தேங்கிய மழைநீர்

Published On 2023-09-25 09:50 GMT   |   Update On 2023-09-25 09:50 GMT
  • விவசாயிகள் வேதனை
  • தென்னை மரங்கள், பயிர்கள் சேதம்

அணைக்கட்டு:

அணைக்கட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

தற்போது, விவசாயிகள் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். நன்கு வளர்ந்துள்ள நிலக்கடலை பயிர்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிய நிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்று முதல் அணைக்கட்டு சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ய தொடங்கியது.

சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால், தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் புத்துயிர் பெற்று செழுமையாக உள்ளது. இருந்தாலும், இந்த கனமழை நீடித்தால் மற்ற பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News