உள்ளூர் செய்திகள்

தங்கும் விடுதியில் விபசாரம்

Published On 2023-04-03 09:21 GMT   |   Update On 2023-04-03 09:21 GMT
  • மேலாளர் கைது
  • வாலிபருக்கு எச்சரிக்கை

வேலூர்:

வேலூர் காந்திரோடு, பாபு ராவ் தெருவில் உள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்ப தாக வேலூர் வடக்கு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்குள்ள விடுதி களில் அதிரடியாகசோதனை செய்தனர்.

அப்போது பாபுராவ் தெரு வில் உள்ள தங்கும் விடுதியின் அறை ஒன்றில் இளம்பெண்ணும், வாலிபரும் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

போலீசாரின் விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தங்கும் விடுதியை குத்தகை எடுத்து நடத்தி வருவதும், அங்கு மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் வாலிபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News