உள்ளூர் செய்திகள்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-06-15 14:53 IST   |   Update On 2023-06-15 14:53:00 IST
  • நாளை நடக்கிறது
  • 40-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன

வேலூர்:

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதத்தில் 3-வது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்திட வேலைவாய்ப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை வேலை அளிக்கும் தனியார் நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள அனைத்து வகை பதிவு தாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

இந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படட மாட்டாது. தனியார் துறை பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளை காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News