உள்ளூர் செய்திகள்

திருடன் என நினைத்து வட மாநில வாலிபருக்கு அடி-உதை

Published On 2022-09-16 15:44 IST   |   Update On 2022-09-16 15:44:00 IST
  • போலீசார் விசாரணை
  • ஆஸ்பத்திரியில் அனுமதி

வேலூர்:

வேலூர் கொணவட்டம், சேண்பாக்கம் மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இர வும் அந்த வாலிபர் கொணவட்டம் பெரி யமசூதி அருகே சுற்றியுள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த வடமாநில வாலிபர், குழந்தையை கடத்தி செல்லும் நபர் அல்லது வீட்டை நோட்டமிட்டு திருடும் நபராக இருக்கலாம் என்று சந்தே கம் அடைந்தனர்.

இதையடுத்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைகளை கட்டி சர மாரியாக அடித்து உதைத்தனர். மேலும் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையி லான போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் இருந்து வடமாநில வாலிபரை மீட்டு விசாரித்தனர்.

அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. காயம் அடைந்த வாலிபர் முத லுதவிக்காக அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத் தில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News