எல்.ஐ.சி. அலுவலகம் ரூ.33 லட்சம் வரி பாக்கி
- மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
- ஜப்தி நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் சொத்து வரி குடிநீர் கட்டிட வரி வசூல் தீவிர படுத்தப்பட்டுள்ளது. வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் சார்பில் சொத்து வரி கட்டப்படாமல் உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கணக்கிட்ட போது ரூ.35 லட்சம் வரை எல்.ஐ.சி. வரி பாக்கி வைத்துள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் இருந்து எல்.ஐ.சி. அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதில் ரூ.33 லட்சம் வரை பாக்கி உள்ளது.
அதனை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் எல்.ஐ.சி. அலுவலகம் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் நேரில் சென்று இது குறித்து நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து எல்.ஐ.சி. அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் விரைவில் சொத்து வரியை செலுத்தி விடுகிறோம் எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்.ஐ.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஜப்தி நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.