உள்ளூர் செய்திகள்
காதல் மனைவியை மதம் மாற வற்புறுத்திய கணவர் கைது
- இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்
- அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் கஸ்பாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சின்ன அல்லாபுரத்தை சேர்ந்த ஒருவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் அந்தப் பெண்ணை, கணவர் தனது மதத் திற்கு மாறிவிடுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் மனைவியை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.