உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை

Published On 2023-08-11 09:37 GMT   |   Update On 2023-08-11 09:37 GMT
  • கதவின் பூட்டு உடைத்து துணிகரம்
  • போலீசார் விசாரணை

காட்பாடி:

வள்ளிமலை அடுத்த பெரியமிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (45). லாரி டிரைவர்.

இவ ரது மனைவி ஜெயந்தி (39). இவர்கள் இருவரும் நேற்று காலை வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர்.

பின்னர் மாலை வீட்டுக்கு திரும்பி வந்தனர். அங்கு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந் ததை கண்டு அதிர்ச்சிய டைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென் றது தெரிந்தது.

இதுகுறித்து வெங்கடே சன் கொடுத்த புகாரின் பேரில் மேல்பாடி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News