உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகம் எதிரே மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-30 15:51 IST   |   Update On 2023-06-30 15:51:00 IST
  • இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

வேலூர்:

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.

சி.பி.எம். மாவட்ட செயலாளர் தயாநிதி, மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன், மாநிலத் துணைச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் மற்றும் பயிர்சேதங்களுக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

மலைவாழ் மக்களுக்கு வங்கிகளில் மானிய உதவியுடன் கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அனைவரும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News