உள்ளூர் செய்திகள்

வேலூர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

மீன்களின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது

Published On 2023-08-27 08:56 GMT   |   Update On 2023-08-27 08:56 GMT
  • வேலூர் மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர்
  • 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன

வேலூர்:

வேலூர் மீன் மார்க் கெட்டுக்கு நாகப்பட்டினம், மங்களூரு, கோழிக்கோடு கார்வார் போன்ற இடங்க ளில் இருந்து மீன்கள் கொண்டுவரப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் கர்நாடகா, கேரளாவில் மீன் பிடி தடைக்காலம் தொடங்கியதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மீன் வரத்து குறைவாக காணப்பட்டது.

இதனால் அனைத்து வகை கடல் மீன்களின் விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து. இன்று மீன்கள் வரத்து அதிகரித் துள்ளது.

இதனால் கடந்த வாரத்தை விட விலை சற்று குறைந்துள்ளது. அதன் படி, இன்று வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் ரூ.1,500 வரையும், இறால் கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரையும், நண்டு கிலோ ரூ.400 வரையும் விற்பனை செய்தனர்.

சங்கரா ரூ.250-க்கும், கட்லா ரூ.120-க்கும், மத்தி ரூ.120-க்கும், சீலா ரூ.300, தேங்காய் பாறை ரூ.400, மத்தி ரூ.140, வவ்வால் ரூ.500 முதல் ரூ.800 வரையும், டேம் வவ்வால் ரூ.150-க்கும், மேல் அரசம் பட்டில் இருந்து வந்த வயல் நண்டு ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட் டது.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் 4 லோடு மீன்களின் வரத்து அதி கரிப்பால், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News