உள்ளூர் செய்திகள்

ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2023-06-17 15:13 IST   |   Update On 2023-06-17 15:13:00 IST
  • சாலையில் கேட்பாரற்று கிடந்த மூட்டைகள்
  • குடியாத்தம் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது

வேலூர்:

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி பகுதியில் பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி மற்றும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலையில் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை ஆய்வு செய்தனர.

இதில் 555 கிலோ ரேஷன் அரிசியை, மூட்டைகள் மூலம் கடத்துவதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, குடியாத்தம் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News