உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி சேவைபுரிந்தவர்களுக்கு விருது

Published On 2023-06-16 15:11 IST   |   Update On 2023-06-16 15:11:00 IST
  • 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
  • கலெக்டர் தகவல்

வேலூர்:

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள மாற்றுத்தி றனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவைபுரிபவர்கள், சிறப்பாக சேவை புரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் முதல் அமைச்சரால் விருது வழங்கப்படுகிறது.

15.08.2023 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் தமிழக அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள், தேர்வுகுழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்வரும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

மாற்றுத்தி றனாளி களுக்கு சேவைபுரிந்த சிறந்த தொண்டு நிருவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழும், மாற்றுத்தி றனாளி களுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த சமூகப் பணியாளருக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்க உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மேற்படி விருதுகளுக்கு தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்களி டமிருந்து விண்ண ப்பங்கள் வரவேற்க்க ப்படுகிறது. இந்த விருதுகளு க்கான விண்ணப்ப படிவங்களை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர், மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலகம், பழைய பஞ்சாயத்து அலுவலக வளாகம், அண்ணா சாலை, என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து உரிய அனைத்து சான்றித ழ்களுடன வருகிற 26-ந் தேதிமாலை 5.30 மணிக்குள் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News