உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-11 14:41 IST   |   Update On 2023-07-11 14:41:00 IST
  • காலிப் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தல்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அணைக்கட்டு:

அணைக்கட்டு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் எதிரே அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். காலைச் சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் விடாமல் சத்துணவுத் திட்டத்திலே இணைத்திட வேண்டும்.

சத்துணவுத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News