உள்ளூர் செய்திகள்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா

Published On 2023-07-12 13:50 IST   |   Update On 2023-07-12 13:50:00 IST
  • நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
  • 10 நாட்கள் தொடந்து நடைபெறும்

வேலூர்:

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 25-ம் ஆண்டு ஆடிப்பூரத்தையொட்டி பிரம்மோற்சவ விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 13-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 10 நாட்களுக்கு தொடந்து ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை காலை கோவில் நடை திறப்பு, பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் மற்றும் கொடியேற்றம் நடைபெற உள்ளது.

தினமும் 10 நாட்களுக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

விழாவின் நிறைவு நாளான வருகிற 22-ந் தேதி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தீர்த்தவாரி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபன ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News