உள்ளூர் செய்திகள்

மாடியில் இருந்து தவறி வாலிபர் பலி

Published On 2023-08-06 13:48 IST   |   Update On 2023-08-06 13:48:00 IST
  • வடமாநிலத்தை சேர்ந்தவர்
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

வேலூர்:

ராஜஸ்தான் மாநிலம் தோலாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீர்பால்கட்போ (35).

இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் வேலூருக்கு வந்தார். காட்பாடி தாராபடவேட்டில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்தார்.

இந்நிலையில் கடந்த 1-ந் தேதி மாலை மாடி படியில் ஏறிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பா றை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News