உள்ளூர் செய்திகள்

சவ ஊர்வலத்தில் பட்டாசு வீசியதில் காயமடைந்தவர் பலி

Published On 2023-03-02 15:24 IST   |   Update On 2023-03-02 15:24:00 IST
  • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்து விட்டார். மூதாட்டியின் சவ ஊர்வலம் அன்று மாலையில் நடைபெற்றது.

சவ ஊர்வலத்தின் போது வாகனத்தில் இருந்து பட்டாசுகளை வாங்கி கொளுத்தி தூக்கி போட்டு உள்ளனர். பட்டாசு வெடித்ததில் கள்ளூர் கிராமம் சீனிவாசா நகரை சேர்ந்த பிரபாகரன் (வயது 30) டிரைவர், உடன் இருந்த கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் நாகல் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி டில்லி பாபு (27) ஆகிய இருவரும் பட்டாசு வெடித்ததில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்து வமனையில் சேர்க்க ப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த பிரபாகரன் நேற்று மாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் இறந்த தகவல் அறிந்ததும் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News