உள்ளூர் செய்திகள்

பேரணாம்பட்டில் புதிய ரேசன் கடை

Published On 2022-09-08 09:34 GMT   |   Update On 2022-09-08 09:35 GMT
  • அமலு விஜயன் எம்.எல.ஏ. திறந்து வைத்தார்
  • பலர் கலந்து கொண்டனர்

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு அடுத்த கள்ளிப்பேட்டை ஏரிகுத்தி போன்ற கிராமங்களில் புதிதாக கட்டப்பட்டிருந்த ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேரணாம்பட்டு கூட்டுறவு சங்க சார்பதிவாளர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார்.

கூட்டுறவு பொது விநியோக திட்ட சார்பதி வாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

பேர்ணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் தனலட்சுமி வரவேற்று பேசினார். 2 புதிய ரேசன் கடைகளையும் அமுலு விஜயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் சித்ரா ஜனார்தனன், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் லலிதா டேவிட், ஆத்மா குழு தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் டேவிட் சாத்கர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நீலா கபில், ரேசன் கடை விற்பனையாளர்களான சதீஷ், ரீகன், ரமேஷ், லோகேஷ், பாதுஷா, உஸ்மான், மஞ்சுளா, சங்கீதா, ராஜேந்திரன், கோகிலா, லிவின்குமார், பொறுப்பு ஊராட்சி செயலாளர் நேதாஜி மற்றும் சோக்கன் வில்லியம் அருமை நாயகம் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பி எஸ் கோபிநாத் நன்றி கூறினார்.

Tags:    

Similar News