உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர் கால் டயரில் சிக்கி காயம்

Published On 2023-02-28 15:11 IST   |   Update On 2023-02-28 15:11:00 IST
  • பஸ் படிக்கட்டில் தொங்கி சென்ற போது பரிதாபம்
  • கூடுதலாக அரசு டவுன் பஸ்களை இயக்க வலியுறுத்தல்

வேலூர்:

ஆற்காட்டில் இருந்து வேலூர் பழைய பஸ் நிலையத்திற்கு இன்று காலை அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது.ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கி கொண்டு வந்தனர்.

சத்துவாச்சாரி பஸ் நிறுத்தம் வந்ததும் பஸ் நின்றது.அதிலிருந்து சில பயணிகள் கீழே இறங்கினர். பஸ் புறப்பட்டதும் வேகமாக ஓடி சென்று கல்லூரி மாணவர் ஒருவர் ஓடிக்கொண்டிருந்த பஸ் ஜன்னலை பிடித்து தொங்கினார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் டயருக்கும் பஸ்சுக்கும் நடுவில் சிக்கியது.இதனால் அவர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டதும் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். அதனால் மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மாணவரின் காலை லாவகமாக மீட்டனர். இந்த விபத்தில் மாணவரின் காலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதை தொடர்ந்து பஸ் புறப்பட்டு சென்றது. இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாநகரப் பகுதியில் கிராமங்களில் இருந்து வரும் அரசு டவுன் பஸ் களில் நாளுக்கு நாள் பள்ளி மாணவ மாணவிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. பல மாணவ மாணவிகள் தொங்கியபடியே பள்ளிக்கு செல்கின்றனர்.

அசம்பாவிதம் நடைபெறுவதை தடுக்க கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக அரசு டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News