உள்ளூர் செய்திகள்

போதைப் பொருள் ஒழிப்பது குறித்து துண்டு பிரசுரங்களை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வெளியிட்ட காட்சி.

வேலூரில் 2 ஆயிரம் கடை, வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

Published On 2022-09-06 14:44 IST   |   Update On 2022-09-06 14:44:00 IST
  • போதை பொருள் விற்பனை தடுக்க நடவடிக்கை
  • போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

வேலூர்:

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை, கடத்தலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

போதை பொருட்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் மாவட்ட காவல் துறையின் பிரத்தேக வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வாட்ஸ் அப் எண் 9092700100 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வணிகர் சங்கமும், போலீசார் இணைந்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஒட்டும் பணி வேலூர் லாங்கு பஜாரில் இன்று நடந்தது.

வணிகர் சங்க மாவட்ட தலைவர் ஞானவேலு, செயலாளர் ஏ.வி.எம். குமார், துணைத் தலைவர் ரமேஷ்குமார், இளைஞரணி செயலாளர் அருண் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2 ஆயிரம் ஸ்டிக்கர்கள் கடைகளில், வாகனங்களில் ஒட்டும் பணியை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைத்தார். அவர் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினார்.

மேலும் லாங்கு பஜார், பி .எஸ். எஸ். கோவில் தெருவில் உள்ள கடைகளிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மற்றும் போலீசார், வணிகர்கள் நேரடியாக சென்று ஸ்டிக்கர்களை ஒட்டினர்.

Tags:    

Similar News