என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Awareness sticker"
- போதை பொருள் விற்பனை தடுக்க நடவடிக்கை
- போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
வேலூர்:
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை, கடத்தலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
போதை பொருட்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் மாவட்ட காவல் துறையின் பிரத்தேக வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வாட்ஸ் அப் எண் 9092700100 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வணிகர் சங்கமும், போலீசார் இணைந்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஒட்டும் பணி வேலூர் லாங்கு பஜாரில் இன்று நடந்தது.
வணிகர் சங்க மாவட்ட தலைவர் ஞானவேலு, செயலாளர் ஏ.வி.எம். குமார், துணைத் தலைவர் ரமேஷ்குமார், இளைஞரணி செயலாளர் அருண் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2 ஆயிரம் ஸ்டிக்கர்கள் கடைகளில், வாகனங்களில் ஒட்டும் பணியை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைத்தார். அவர் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினார்.
மேலும் லாங்கு பஜார், பி .எஸ். எஸ். கோவில் தெருவில் உள்ள கடைகளிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மற்றும் போலீசார், வணிகர்கள் நேரடியாக சென்று ஸ்டிக்கர்களை ஒட்டினர்.
- குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சைல்டுலைன் அமைப்பின் செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- அனைத்து பஸ்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சைல்டுலைன் அமைப்பின் செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் தடுப்பு பிரிவு போலீசார் பஸ்நிலையத்திற்கு வந்த அனைத்து பஸ்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினர்.
பொதுமக்களுக்கும் துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. குழந்தை கடத்தல் மற்றும் பாலியல்தொல்லை குறித்து பொதுமக்கள் அரசின் இலவச தொலைபேசிகளில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்