உள்ளூர் செய்திகள்

சாராய வியாபாரிகள் 14 பேர் கைது

Published On 2023-06-16 15:06 IST   |   Update On 2023-06-16 15:06:00 IST
  • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
  • டி.ஐ.ஜி கடும் எச்சரிக்கை

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் கள்ளச்சாராயம், மதுவிலக்கு தொடர்பாக மொத்தம் 1430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 1308 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 13 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 39 இருசக்கர, ஒரு ஆட்டோ மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான மதுவிலக்கு போலீசார் தொடர்ந்து சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத மலைப்பகுதி உள்ளிட்ட இடத்தில் பதுக்கி வைக்கப்படும் சாராயம் மற்றும் சாராய ஊறல்களை போலீசார் கைப்பற்றி அழிக்கின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் யார் என அடையாளம் காணப்பட்டால் அவர்களின் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென டி.ஐ.ஜி முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் வேலூர் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட 14 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதனால் சாராய வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News