- தொடர் விடுமுறையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவார்கள்.
- கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.
நாகப்பட்டினம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாள் தொடர் விடுமுறையால் சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.
ஆனால் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை புரிவார்கள்.
இந்த ஆண்டு நாகப்பட்டி னத்தில் நிலவும் தொடர் கனமழை காரணமாக நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.
குறிப்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறும் திருப்பலி, வேளாங்கண்ணி கடற்கரை, முடி காணிக்கை செலுத்தும் இடம்,கடைவீதி மெழுகுவர்த்தி கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் குறைவான கூட்டமே காணப்படுகிறது.
எப்பொழுதும் அதிக கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணி பேராலயம் கலை இழந்து காணப்படுகிறது. கடற்கரையில் அதிக கூட்டம் இல்லாததால் சிரமம் இல்லாமல் குடும்பத்துடன் நீராட முடிந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் தீபா வளிக்கு அதிக வியாபாரம் நடக்கும் என எதிர்பார்த்த வியாபாரி களுக்கு உரிய விற்பனை இன்றி ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.