உள்ளூர் செய்திகள்

2 ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து வீடியோ வெளியிட்ட வரிச்சியூர் செல்வம்

Published On 2023-05-23 07:24 GMT   |   Update On 2023-05-23 07:24 GMT
  • இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  • 2 ஆயிரம் ரூபாய் தாளை இனி எப்போ பார்க்க போறேனோ?

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடமாடும் நகைக்கடை என அழைக்கப்படும் மதுரை வரிச்சியூர் செல்வம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில், ரூ.2 ஆயிரம் தாளா போகுது. ஒருவாட்டி முகர்ந்துகிறேன். இந்த 2 ஆயிரம் ரூபாய் தாளை இனி எப்போ பார்க்க போறேனோ? தலைவா திரும்பவும் 2 ஆயிரம் ரூபாய் தாளை போட்டிங்கனா சொல்லிட்டு செய்யுங்க. இருக்கிற 2 ஆயிரம் ரூபாய் தாள் பூரா இப்படி வெட்டியா போகுது.

ஓகே மகிழ்ச்சி, விடை கொடுக்கிறேன் உனக்கு. போயிட்டு வா ஆத்தா... எங்களை காக்கும் தெய்வம் நீ.. எங்களை விட்டு போற... என கூறியுள்ளார்.

Tags:    

Similar News