உள்ளூர் செய்திகள்

ஆனைமலையில் வேன் டிரைவர் தற்கொலை முயற்சி

Published On 2023-11-23 09:21 GMT   |   Update On 2023-11-23 09:22 GMT
  • கள்ளக்காதலி வேறு ஒருவருடன் பழகியதால் வேதனை
  • 2 கைகளையும் அறுத்து கொண்டார்

கோவை,

கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 29 வயது வேன் டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இது குறித்து இளம்பெண் ஆனைமலை போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வேன் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பின்னர் விடுவித்தனர். இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவருடன் இளம்பெண் ஜாலியாக இருந்து வந்தார். இந்த விவகாரம் வேன் டிரைவருக்கு தெரிய வரவே அவர் தனது கள்ளக்காதலியை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் மனவேதனை அடைந்த வேன் டிரைவர் அவரது இடது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் வேன் டிரைவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இளம்பெண் தன்னை ஏமாற்றி விட்டதாக பதிவு செய்து இருந்தார். இதனை பார்த்த நெல்லையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேன் டிரைவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இளம்பெண் என்னுடைய மனைவி அவரை தொந்தரவு செய்யக்கூடாது என மிரட்டி உள்ளார். இனால் மனவேதனை அடைந்த வேன் டிரைவர் அவரது வலது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த தகவல் கிடைத்ததும் ஆனைமலை போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னை ஏமாற்றிய இளம்பெண் மீதும், நெல்லையை சேர்ந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News