உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் ஒன்றிய குழு கூட்டம்

Published On 2023-08-11 14:56 IST   |   Update On 2023-08-11 14:56:00 IST
  • சோக்காடி ஊராட்சி ஏரி வழியே எண்ணெகொள் கால்வாய் அமைப்பதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும்.
  • சிக்கபூவத்தி மற்றும் சோக்காடி ஆகிய ஊராட்சி களில் அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்குதல் ஆகியவை குறித்தும் விவாதித்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஒன்றியக் குழுத் தலைவர் அம்சாராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில், ஊராட்சி ஒன்றிய சாலைகளை ஊராட்சி சாலைகளாக மாற்ற வேண்டும். அத்தியா வசியமாக தேவைப்படும் இடங்களில் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுதல், சாலைகள் மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சோக்காடி ஊராட்சி ஏரி வழியே எண்ணெகொள் கால்வாய் அமைப்பதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும். சிக்கபூவத்தி மற்றும் சோக்காடி ஆகிய ஊராட்சி களில் அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்குதல் ஆகியவை குறித்தும் விவாதித்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ், முருகன், தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் அலுவலகப் பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News