உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.

மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு உடன்குடி பள்ளி மாணவர்கள் தேர்வு

Published On 2022-12-15 08:41 GMT   |   Update On 2022-12-15 08:41 GMT
  • தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடந்தது.
  • இதில் கிறிஸ்டியா நகரம் டி.டி.டி.ஏ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடந்தது. இதில் கிறிஸ்டியா நகரம் டி.டி.டி.ஏ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவன் முத்துக்குமார்19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 மீட்டர் பேக்ஸ்டோக் போட்டியில் முதலிடமும், 100 மீட்டர் பரிஸ்டைல்போட்டியில் 2-ம் இடமும் பிடித்தனர். மாணவன் மைக்கேல் சுரேன் 17 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் 200 மீட்டர் பிரிஸ்டைல் போட்டியில் முதலிடமும், 200 மீட்டர் பேக்ஸ்டோக் போட்டியில் 2-ம் இடமும் , மாணவன் டினோ 100 மீட்டர் பிரிஸ்டைல் போட்டியில் 3-ம் இடமும், 100 மீட்டர் பிளேபாட்டியில் 2-ம் இடமும், மாணவன் ரோபின் 50 மீட்டர் பேக்ஸ் போக் போட்டியில் 3-ம் இடமும் பெற்றான். 4 x 100 மிஸ்டர் தொடர் போட்டியில் மாணவர்கள் ரோபின், மைக்கேல் சுரேன், ஜெ ரிக்சன், டினோ ஆகியோர் சாதனை படைத்தனர். மாநில மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்வு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் ஆரோன்ராஜ், தலைமை ஆசிரியர் லிவிங்ஸ்டன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரவிக்குமார், ஐசக்கிருபாகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News