உள்ளூர் செய்திகள்

5 ஆயிரம் லிட்டர் டீசல் கடத்திய இருவர் கைது

Published On 2023-11-06 14:46 IST   |   Update On 2023-11-06 14:46:00 IST
  • காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
  • 2 சரக்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்:

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து டீசல் கடத்தப்படுவதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்க்கு தகவல் வந்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் நாகூர் அருகே வெட்டாறு பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த 2 சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு உரிய அனுமதியில்லாமல் 5ஆயிரத்து 100 லிட்டர் டீசல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நாகூர் பண்டகசாலை தெருவை சேர்ந்த அரவிந்த்குமார், நாகை தோள்கிடங்கு மெயின் ரோட்டை சேர்ந்த செல்லப்பாண்டி என்பது தெரியவந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகூர் போலீசார் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 5100 லிட்டர் டீசலையும், 2 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்து, அரவிந்தகுமார், செல்லப்பாண்டி, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News