உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது

Published On 2023-02-11 14:10 IST   |   Update On 2023-02-11 14:10:00 IST
  • கடைகளிலிருந்து மது பாட்டில்கள் மொத்தமாக வாங்கி வந்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு அதிக விலைக்கு விற்றதாக கூறப்படுகிறது.
  • மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்று வந்த இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபாட்டிகல்களை பறிமுதல் செய்தனர்.

திருக்கழுக்குன்றம்:

திருக்கழுக்குன்றத்தை அடுத்த சாலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 55), கோவிந்தராஜ் (49). இவர்கள் கடைகளிலிருந்து மது பாட்டில்கள் மொத்தமாக வாங்கி வந்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு அதிக விலைக்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தலைமையில் திருக்கழுக்குன்றம் போலீசார் அந்த பகுதிக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் அந்த பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்று வந்த செல்வம் மற்றும் கோவிந்தராஜ் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபாட்டிகல்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News