உள்ளூர் செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி கொல்ல முயற்சி?- போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-04-02 08:16 GMT   |   Update On 2023-04-03 06:19 GMT
  • இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
  • 2 பேரும் பிளஸ்-2 படித்து வருகிறார்கள் என்பது தெரியவந்தது.

கடலூர்:

பண்ருட்டி கும்பகோணம் சாலையில் பணிக்கன்குப்பம் சாலையில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே 2 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை நிறுத்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் முயற்சித்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதினார்கள். இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்ட ர் சிவக்குமார், மோட்டார் சைக்கிளில் வந்த 2 சிறுவர்களும் பலத்த காயம டைந்தனர். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் 3 பேரையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துமனைக்கு சிகி ச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனு ப்பிவை க்கப்பட்டுள்ளனர். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள் 2 பேரும் பிளஸ்-2 படித்து வருகிறார்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் போக்குவரத்து போலீசாருக்கு பயந்து வேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதா? அல்லது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை சிறுவர்கள் கொலை செய்ய முயற்சித்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பண்ருட்டி பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News