உள்ளூர் செய்திகள்

பெங்களூரில் இருந்து பவானிக்கு கடத்த முயன்ற 43 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்

Published On 2022-12-11 14:59 IST   |   Update On 2022-12-11 14:59:00 IST
  • கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
  • புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானகண்ரகுநாதன் மற்றும் போலீசார் நேற்றுகிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து644 மதிப்பிலான, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த காரின் டிரைவரான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த தட்டரங்குட்டையை சேர்ந்த விமல் எபினேஷன்(வயது 31) என்பரை கைது செய்துவிசாரணை நடத்தினர்.

விசாரணையில், புகையிலை பொருட்களை பெங்களூரில் இருந்துபவானிக்கு கடத்தி சென்றதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News