உள்ளூர் செய்திகள்

லாட்டரி விற்ற 3 பேர் கைது

Published On 2023-09-30 14:49 IST   |   Update On 2023-09-30 14:49:00 IST
  • திருச்சியில்லாட்டரி விற்ற 3 பேர் கைது
  • இரு சக்கர வாகனம் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

 திருச்சி. 

திருச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சரக்கத்துக்கு உட்பட்ட கொடாப்புரோடு, குழுமணி ரோடு பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் லாட்டரி விற்றதாக வெங்கடாசலம், சங்கர், ரகு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், இரு சக்கர வாகனம் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News