உள்ளூர் செய்திகள்

வைரஸ் காய்ச்சல் பாதிப்பு

Published On 2023-03-09 13:38 IST   |   Update On 2023-03-09 13:38:00 IST
  • திருச்சியில் தயார் நிலையில் உள்ள சிறப்பு வார்டு
  • நோய் அறிகுறிகள் குறித்து மருத்துவக்கல்லூரி டீன் நேரு விளக்கம்

திருச்சி, 

சமீபத்திய பருவநிலை மாற்றங்களால் பொதுமக் கள் அதிகம் வைரஸ் காய்ச் சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சி மாவட் டத்தை பொருத்தமட்டில் பொழுது சாய்ந்தால் பனிப் பொழிவும், பகலில் சுட் டெரிக்கும் வெயிலும் மக் களை பாடாய்ப்படுத்தி வருகிறது.வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோயின் தாக் கத்தை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மருத் துவக்கல்லூரி டீன் நேரு கூறுகையில், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு தினமும் ஐந் தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புற நோயாளிகளாக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக மட்டும் 1,400 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த வைரஸ் காய்ச்சல் என்பது தட்பவெப்ப நிலை மாற்றத்தினால் வரக்கூடியது. திருச்சி மாவட்டத்தில் பெரிய அளவுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற் போதைய நிலையில் அந்த வார்டில் நோயாளிகள் யாரும் இல்லை.வைரஸ் காய்ச்சலின் நோய் அறிகுறி என்பது உடலை முறிக்கும் அளவுக்கு உடல் வலி, தொண்டை வலி, கண்கள் மற்றும் மூக்கிலிருந்து தண்ணீர் வடிதல், வயிற்றுப்போக்கு, நுரையீரல் சளி ஆகியவையாகும். மேற்கண்ட நோய் அறிகுறிகள் கலந்திருந்தால் வைரஸ் காய்ச்சல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.இந்த அறிகுறி இருப்பவர்களுக்கு 3 நாட்கள் காய்ச்சலின் தாக்கம் இருக் கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள், இணை வியாதிகள் இல்லாதவர்கள் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் 3 நாட்களில் தானாகவே சரியாகிவிடும்.அதற்கு மேலும் மேற் கண்ட நோய் அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத் துவமனைகளில் உள்நோயாளிகளாக சேர்ந்து விடவேண்டும். டாக்டர்கள் சளி மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுள் ளதா? என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிப்பார்கள்.பொதுமக்கள் வைரஸ் காய்ச்சல் குறித்து எந்தவித அச்சமும் உள்ள தேவையில்லை. திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளது. 24 மணி நேரமும் சிறப்பு வார்டில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியமர்த்தப்பட்டு உள் ளார்கள் என்றார்.

Tags:    

Similar News