உள்ளூர் செய்திகள்
வீட்டு வாசலில் நிறுத்திய ஆட்டோ திருட்டு
- வீட்டு வாசலில் நிறுத்திய ஆட்டோ திருட்டுபோனது
- வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்றவர்
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் பழ நந்தவனம் ஸ்ரீனிவாச நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவர் தன்னுடைய ஆட்டோவை கடந்த 6-ந் தேதி வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்றவர் மீண்டும் மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவர் நிறுத்தி இருந்த ஆட்டோ திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.